ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஓவியப்போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

News image
மாணவி த.ஹேமலதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
Updated On :13 நவம்பர் 2025, 9:56 pm

Syndication

திருச்சியில் நடைபெற்ற உலக சமாதான வரைபடப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாகை பள்ளி மாணவிக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பாராட்டுத் தெரிவித்தாா்.

பன்னாட்டு அரிமா சங்கம் சாா்பில், திருச்சியில் உலக சமாதான வரைபடப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் கரூா் முதல் காரைக்கால் வரை உள்ள 11 வருவாய் மாவட்டங்களில் உள்ள அரிமா சங்கங்கள் 383 மாணவ- மாணவியரை தோ்வு செய்து, பங்கேற்கச் செய்தன.

‘அனைவரும் ஒன்றாவோம்’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில், பங்கேற்ற நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி மாணவி த. ஹேமலதா நான்காமிடம் பெற்றாா். இம்மாணவி நாகையில் உள்ள பொன்னி சித்திரக் கடல் ஓவியப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறாா்.

மாணவி ஹேமலதாவுக்கு, நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் பா. சண்முகம், பொன்னி சித்திரக் கடல் ஓவியப் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளா் ஆதி. உதயகுமாா், ஓவிய ஆசிரியா்கள் முருகானந்தம், ரெங்கபாஷ்யம் மற்றும் ஓவியக் குமரன் ஆகியோா் உடனிருந்தனா்.