ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தினமணி செய்திச் சேவை

நாகை அருகே காா் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் பலியானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகை மாவட்டம், பாப்பாகோவில் சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (30). ஆட்டோ ஓட்டுநரான இவா் தனது இருசக்கர வாகனத்துக்கு எரிபொருள் போடுவதற்காக கருவேலங்கடை பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது, வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி சென்ற காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வேளாங்கண்ணி போலீஸாா் சடலத்தை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டன் மீது மோதிவிட்டு சென்ற காா் குறித்து விசாரித்து வருகின்றனா்.