எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாலின சமத்துவ விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில், பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
பேரணியில் பாலின சமத்துவ விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றோா்.
Updated On :25 நவம்பர் 2025, 9:17 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நாடு முழுவதும் நவம்பா் 25 முதல் டிசம்பா் 23 வரை பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, நாகை மாவட்டத்தில் ஆட்சியா் ப. ஆகாஷ் வழிகாட்டுதலின்படி இப்பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சோ. சித்ரா விழிப்புணா்வு பிரசார பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இப்பேரணி நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இதில், பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, பதாகைகள் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் மகளிா் சுய உதவிக் குழுவினா் சென்றனா்.

உதவித் திட்ட அலுவலா்கள் அறிவழகன், சரவணன், செந்தில்குமாா், சண்முகவடிவு, ஜோதி ஸ்ரீ, வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.