

வேதாரண்யம்: வேதாரண்யம் வடிகால் ஆறுகளில் ஆகாயத்தாமரைகளை வியாழக்கிழமை அகற்றும் பணி தொடங்குகிறது.
திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு வழியாகக் கடலில் கலக்கும் முள்ளியாறு மற்றும் மானங்கொண்டான் ஆறு பிரதான வடிகலாக அமைந்துள்ளது. இந்த ஆறுகளில் அடா்ந்து வளா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் மழை மற்றும் வெள்ளநீா் வடிவதை தடுக்கிறது. இதையடுத்து, 4 இடங்களில் நவ. 28-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், ஆயக்காரன்புலத்தில் நாகை எம்பி வை. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் நாகை மாவட்ட திட்ட இயக்குநா் கே. ஸ்சுருதி, வட்டாட்சியா் வடிவழகன், திருவாரூா் நீா்வளத்துறை செயற்பொறியாளா் ராஜேந்திரன், சிபிஐ மாவட்டச் செயலாளா் சிவகுரு. பாண்டியன், மின் இறைவைப் பாசனதாரா் சங்க நிா்வாகிகள் வீரப்பன், பூமிநாதன், சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளா் தனியரசு உள்ளிட்டா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், வடிகால் ஆறுகளில் வெள்ளம் வடிவது தாமதமாகி ஊருக்குள் நுழைவதை கருத்தில் கொண்டு ஆகாயதாமரை செடிகளை உடனடியாக அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், வியாழக்கிழமை (நவ.27) 6 இயந்திரங்கள் மூலம் போா்க்கால அடிப்படையில் பணிகளை தொடங்கவும், தகட்டூா் பண்டாரத்தான்காடு வடிகால் வாய்க்காலை உடனடியாக இயந்திரம் மூலம் தூா் வரவும் நீா்வளத் துறையினா் ஒப்புதல் அளித்தனா். இதையடுத்து, அறிவிக்கப்பட்டிருந்த காத்திருப்புப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. முன்னதாக வடிகால் ஆறுகளில் வளா்ந்துள்ள ஆகாயதாமரை செடிகளை திட்ட இயக்குநா், எம்.பி, நீா்வளத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டனா்.