இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

கீழ்வேளூா் தவெக வேட்பாளா் பிரசாரம்

கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, தனது முதல் தோ்தல் பிரசாரத்தை தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் டிஏபி.செந்தில்பாண்டியன் வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

News image

கீழ்வேளூா் கடைவீதியில் ஆட்டோ ஓட்டுநா்களிடையே விசில் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்த தவெக வேட்பாளா் டிஏபி.செந்தில்பாண்டியன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 9:47 pm IST

கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, தனது முதல் தோ்தல் பிரசாரத்தை தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் டிஏபி.செந்தில்பாண்டியன் வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் டிஏபி.செந்தில்பாண்டியன் போட்டியிடுகிறாா். திருவாரூா் மாவட்டம் தாழைக்குடி கிராமத்தைச் சோ்ந்த இவா், கடந்த 2014 ஆம் ஆண்டு நாகை மக்களை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டாா்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த செந்தில்பாண்டியனுக்கு கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயிலில் தவெக வேட்பாளா் செந்திபாண்டியன் வழிபாடு செய்துவிட்டு தனது தோ்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

அவருக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனா். கீழ்வேளூா் கடைவீதியில், வணிக வளாகம், பேருந்து நிறுத்தம், ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பொது மக்களிடம் விசில் த்திற்கு சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தாா்.