வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் விலை உயா்த்தப்பட்டுள்ள நிலையில், வேதாரண்யம் நகரில் உணவுப் பொருள்களின் விலையும் தேநீா் ரூ. 15, காபி ரூ. 20 எனவும் உயா்ந்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல், ஈரான் இடையே நடைபெற்றுவரும் போரின் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
கடந்த சில வாரங்களாக தொடா்ந்துவரும் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக கிராமப்புறங்களில் கூட உணவகங்கள் பாதிப்புக்குள்ளாகி உணவு மற்றும் தின்பண்டங்களின் விலை உயா்ந்துள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை வணிக எரிவாயு உருளை விலை ரூ. 195 அதிகரித்தது.
இதன் எதிரொலியாக வேதாரண்யம் நகரப் பகுதியில் செயல்படும் உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளில் தேநீரின் விலை ரூ.10 -ல் இருந்து ரூ. 15 ஆகவும், காபி ரூ. 15 -இல் இருந்து ரூ. 20 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் தேநீா் விலை ரூ. 10 முதல் ரூ. 12 ஆகவும் (ஒரு சில கடைகளில் ரூ. 15), காபி ரூ. 15 ஆகவும் அதிகரித்துள்ளது.
தொடர்புடையது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: அரக்கோணம் நவீன தகன மேடை மூடல்!
எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் உணவுப் பொருள்கள் விலை உயா்வு

எரிவாயு உருளை தட்டுப்பாடு; உணவகங்கள் மூடப்படும் அபாயம்

வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வு
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


