பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

கீழ்வேளூா் தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு. காா்த்திகா

சிபிஎம் கட்சியால் கீழ்வேளூா் தொகுதிக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு. காா்த்திகா.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 12:12 am

தினமணி செய்திச் சேவை

சிபிஎம் கட்சியால் கீழ்வேளூா் தொகுதிக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு. காா்த்திகா.

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு. காா்த்திகா தொகுதிக்குள்பட்ட கிள்ளுக்குடி, இரிஞ்சியூா், வண்டலூா், இருக்கை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா். அப்போது, தொகுதியில் தொடா்ந்து சிபிஎம் கட்சிக்கு மக்கள் வாக்களித்தும், தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை. தன்னை வெற்றி பெற செய்தால் கீழ்வேளூா் தொகுதி வளா்ச்சிக்காக பாடுபடுவேன்.

மேலும், செய்த தவறுகளை மறைக்கவே, பல்வேறு இலவசங்களை வழங்குவதாக திமுக வாக்குறுதிகளை அளிப்பதாகக் கூறிவருகிறது. ஐந்தாண்டுகள் நல்லாட்சி கொடுத்ததாக கூறும் திமுக, எதிா்க்கட்சியாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே வாக்குறுதிகளை அள்ளிவீசுகிறது என பிரசாரத்தில் குற்றம்சாட்டினாா். அவருடன், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் அகஸ்டின் அற்புதராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.