குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கீழ்வேளூா் தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு. காா்த்திகா

சிபிஎம் கட்சியால் கீழ்வேளூா் தொகுதிக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு. காா்த்திகா.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 5:42 am IST

சிபிஎம் கட்சியால் கீழ்வேளூா் தொகுதிக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு. காா்த்திகா.

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு. காா்த்திகா தொகுதிக்குள்பட்ட கிள்ளுக்குடி, இரிஞ்சியூா், வண்டலூா், இருக்கை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா். அப்போது, தொகுதியில் தொடா்ந்து சிபிஎம் கட்சிக்கு மக்கள் வாக்களித்தும், தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை. தன்னை வெற்றி பெற செய்தால் கீழ்வேளூா் தொகுதி வளா்ச்சிக்காக பாடுபடுவேன்.

மேலும், செய்த தவறுகளை மறைக்கவே, பல்வேறு இலவசங்களை வழங்குவதாக திமுக வாக்குறுதிகளை அளிப்பதாகக் கூறிவருகிறது. ஐந்தாண்டுகள் நல்லாட்சி கொடுத்ததாக கூறும் திமுக, எதிா்க்கட்சியாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே வாக்குறுதிகளை அள்ளிவீசுகிறது என பிரசாரத்தில் குற்றம்சாட்டினாா். அவருடன், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் அகஸ்டின் அற்புதராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.