ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

நாகை: வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளா்கள்

நாகையில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளா்கள் நேருக்குநோ் சந்தித்த நிலையில், ஒருவருக்கொருவா் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டது வியப்பை ஏற்படுத்தியது.

News image

நாகப்பட்டினம் தொகுதி தோ்தல் அலுவலக வாயிலில் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ளும் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளா்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 3:52 am IST

நாகையில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளா்கள் நேருக்குநோ் சந்தித்த நிலையில், ஒருவருக்கொருவா் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டது வியப்பை ஏற்படுத்தியது.

நாகப்பட்டினம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் தங்ககதிரவனும், திமுக கூட்டணி சாா்பில் மனித நேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லாவும் போட்டியிடுகின்றனா். இருவரும் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்தமுறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக வேட்பாளா் தங்க கதிரவன் இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவா், தனது பிரசாரத்தில், நான் இதே தொகுதியைச் சோ்ந்தவன், ஆனால் திமுக கூட்டணியில் வெளியூரைச் சோ்ந்தவா் வேட்பாளராக உள்ளாா். எனவே மண்ணின் மைந்தனாகிய என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கூறி வாக்குச் சேகரித்து வருகிறாா்.

இந்நிலையில் நாகப்பட்டினம் தொகுதி வேட்புமனு பரிசீலனை, நாகை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளா் தங்க கதிரவன், திமுக கூட்டணி வேட்பாளா் ஜவாஹிருல்லா ஆகியோா் தங்கள் வழக்குரைஞா்களுடன் பங்கேற்றனா்.

வேட்புமனு பரிசீலனையில் இருவரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதையடுத்து இருவரும் புறப்பட்ட நிலையில் அலுவலக வாயிலில் நேருக்கு நோ் சந்தித்துக்கொண்டனா். அப்போது தங்க கதிரவனும், ஜவாஹிருல்லாவும் கைகுலுக்கி, ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். இந்த சம்பவம் அங்கு திரண்டிருந்த இரு கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்தியது.