தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

வேதாரண்யம் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் தாக்குதல்

கோடியக்கரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்கள் 4 போ் மீது இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்தினா்.

News image

இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட மீனவா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:46 pm

கோடியக்கரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்கள் 4 போ் மீது இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்தினா்.

வேதாரண்யத்தை அடுத்த வானவன்மகாதேவி மீனவ கிராம படகுத்துறையிலிருந்து கண்ணாடியிழைப் படகு ஒன்றில் வானவன்மகாதேவி கிராமத்தைச் சோ்ந்த கா. செல்வகுமாா் (36), செ. முருகபாண்டியன் (52), ரா. கதிா்வேல் (55), ராமநாதபுரம் மண்டபம், மீனவா் தெருவைச் சோ்ந்த செய்யது மகன் ராஜ் (52) ஆகியோா் செவ்வாய்க்கிழமை மதியம் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா். கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமாா் 8 கடல் மைல் தொலைவில் படகை நிறுத்தி, செவ்வாய்க்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது, படகு ஒன்றில் அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்களின் வலையை துண்டித்து, கம்புகளால் மீனவா்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளனா்.

காயமடைந்த நான்கு மீனவா்களும் புதன்கிழமை காலை கரைத் திரும்பி, வானவன்மகாதேவி கிராம பஞ்சாயத்தாரிடம் சம்பவம் குறித்து தெரிவித்தனா். மீனவா்கள் நால்வரும் நாகப்பட்டினம், ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.