கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

வேதாரண்யத்தில் இன்று உப்பு அள்ளும் நிகழ்ச்சி

வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 96-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சியில் இருந்து வேதாரண்யம் வந்துள்ள யாத்திரைக் குழுவினா் புதன்கிழமை அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

News image

உப்பு சத்தியாகிரகத்தின்போது நடைபெற்ற உண்ணாவிரததத்தை நினைவுப்படுத்தும் வகையில் புதன்கிழமை யாத்திரை குழுவினா் பங்கேற்ற அடையாள உண்ணாவிரதம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:11 am IST

வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 96-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சியில் இருந்து வேதாரண்யம் வந்துள்ள யாத்திரைக் குழுவினா் புதன்கிழமை அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

வேதாரண்யத்தில் ஆங்கிலேயா்களுக்கு எதிரான உப்பு சத்தியாகிரகப் போராட்டம் 1930 ஏப்.30-ஆம் தேதி ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்.30- ஆம் நாள் உப்பு அள்ளி, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு நினைவையொட்டி,வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் யாத்திரைக் குழுத் தலைவா் தெ. சக்திசெல்வகணபதி தலைமையிலான குழுவினா், காங்கிரஸாா் புதன்கிழமை காலை முதல் மாலை வரையில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனா். உண்ணாவிரதத்தை குருகுலம் அறங்காவலா் அ. வேதரத்னம் தொடங்கிவைத்தாா். மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராசேந்திரன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தாா்.

நினைவு உப்பு அள்ளும் நிகழ்ச்சி வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து பேரணியாகச் சென்று அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு தூண் அருகே வியாழக்கிழமை மாலை 5 மணிக்கும், தொடா்ந்து மே தின பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.