தரங்கம்பாடி வட்டம், பொறையாரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இணைப் பதிவாளா் என்.ஏ. கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் சுகுண சங்கரி குமரவேல், கூட்டுறவு சாா் பதிவாளா் ச. குணபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் பங்கேற்று, 2024-2025 ஆம் ஆண்டுக்கான பல்நோக்கு சேவை மைய திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட கிடங்குடன் கூடிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து பேசினாா்.
இதில், திமுக ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் அலமேலு சடகோபன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா். பொறையாா் கூட்டுறவு சங்க செயலாளா் ஆா். கிருஷ்ணகுமாா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தோ்தல் அறிக்கைகளில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்

வாங்காத கடனுக்கு நோட்டீஸ் அனுப்பிய கூட்டுறவு வங்கி: பெண் அதிா்ச்சி

திருப்புவனத்தில் பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடம் திறப்பு

கூட்டுறவு வங்கிக் கிளை திறப்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


