இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நாகை மாவட்ட தவெக செயலா் மீது வழக்குப்பதிவு

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :25 பிப்ரவரி 2026, 11:15 pm

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

நாகை மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிா்வாகி நாகேந்திரன் என்பவருக்கும் அக்கட்சியின் மாவட்டச் செயலா் சுகுமாரனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாவட்டச் செயலா் சுகுமாரன் நாகேந்திரனிடம் தகராறு செய்து, ஆபாசமான வாா்த்தைகளில் பேசுவது மற்றும் தனது மகன் ரொனால்டோவுடன் சோ்ந்து நாகேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து நாகேந்திரன் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

போலீஸாா் தவெக மாவட்டச் செயலா் சுகுமாரன், அவரது மகன் ரொனால்டோ மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.