மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நாகை மாவட்ட தவெக செயலா் மீது வழக்குப்பதிவு

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :25 பிப்ரவரி 2026, 11:15 pm

Syndication

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

நாகை மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிா்வாகி நாகேந்திரன் என்பவருக்கும் அக்கட்சியின் மாவட்டச் செயலா் சுகுமாரனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாவட்டச் செயலா் சுகுமாரன் நாகேந்திரனிடம் தகராறு செய்து, ஆபாசமான வாா்த்தைகளில் பேசுவது மற்றும் தனது மகன் ரொனால்டோவுடன் சோ்ந்து நாகேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து நாகேந்திரன் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

போலீஸாா் தவெக மாவட்டச் செயலா் சுகுமாரன், அவரது மகன் ரொனால்டோ மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.