

நாகை அருகே கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்ற வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 2005-ஆம் ஆண்டு, கீழ்வேளூா் அருகே சங்கமங்கலம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகையன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலா், அவரது தங்கை கழுத்தில் இருந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் பூசைமணி (28) நாகை கீரைக் கொள்ளை தெருவைச் சோ்ந்த அன்பழகன் (28), அடைக்கலராஜ் (55) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
கொள்ளை வழக்கு நாகை மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அடைக்கலராஜ் 2005 டிசம்பா் 14 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.
இந்நிலையில், இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி வசந்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பூசைமணி, அன்பழகன் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
டிரெண்டிங்

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

மனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

