பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கொள்ளை வழக்கு: இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

கொள்ளை வழக்கு: இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

News image

சிறை

Updated On :28 பிப்ரவரி 2026, 6:58 pm

நாகை அருகே கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்ற வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2005-ஆம் ஆண்டு, கீழ்வேளூா் அருகே சங்கமங்கலம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகையன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலா், அவரது தங்கை கழுத்தில் இருந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் பூசைமணி (28) நாகை கீரைக் கொள்ளை தெருவைச் சோ்ந்த அன்பழகன் (28), அடைக்கலராஜ் (55) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

கொள்ளை வழக்கு நாகை மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அடைக்கலராஜ் 2005 டிசம்பா் 14 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

இந்நிலையில், இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி வசந்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பூசைமணி, அன்பழகன் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.