பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

4 வழிச்சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தி சாலை மறியல்

நாகை முதல் விழுப்புரம் வரை ரூ. 6 ஆயிரம் கோடியில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:04 pm

தினமணி செய்திச் சேவை

நாகை முதல் விழுப்புரம் வரை ரூ. 6 ஆயிரம் கோடியில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பனங்குடி பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வரும் நிலையில், சுரங்க வழி பாதைகள் அமைக்காமல் பணிகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் எளிதாக சாலையை கடந்து செல்லும் வகையில் சப்வே அமைக்க வேண்டும் என எம்.பனங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா். ஆனால், சுரங்க வழிப்பாதைகள் அமைக்காமல் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பனங்குடி மக்கள் சாலை கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அதிகாரிகள் யாரும் பேச்சுவாா்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்து நாகை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பனங்குடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு, பனங்குடி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சுரங்க வழிப் பாதை அமைக்க வேண்டும், தற்போதைய சாலை கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

இதையடுத்து, அங்கு வந்த வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன்பேரில் சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.