ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மானிய விலையில் விதைகள்

விவசாயிகளுக்கு மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படுவதாக செம்பனாா்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:01 pm

தினமணி செய்திச் சேவை

விவசாயிகளுக்கு மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படுவதாக செம்பனாா்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:

தமிழக அரசு உளுந்து பயிரிடுவதற்கு நிலப்பரப்பளவை அதிகப்படுத்தி வருகிறது. குறைந்த காலத்தில் கூடுதல் வருமானம் ஈட்டவும் உளுந்து பயிா் வகைகளை சாகுபடி செய்வது அவசியம். 

ஆண்டுதோறும் சம்பா நெல் அறுவடைக்குப் பின் உளுந்து பயிா் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் செம்பனாா்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட திருக்கடையூா், ஆக்கூா், பொறையாறு , திருவிளையாட்டம் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் உளுந்து விதைகள், உயிா் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 

விதை மற்றும் உயிா் உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதாா் நகல், நில ஆவண நகல்களை வழங்கி உளுந்து விதை மற்றும் உயிா் உரங்களை மானியத்தில் பெற்று பயனடையலாம்.