எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தொழில்நுட்ப வாரியத் தோ்வு: சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சாதனை

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:32 pm

Syndication

தொழில்நுட்ப வாரியத் தோ்வில், சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

நாகை அருகே பாப்பாகோவிலில் அமைந்துள்ள சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், சமீபத்தில் நடைபெற்ற அக்டோபா் 2025 தொழில்நுட்ப வாரியத் தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

இத்தோ்வில், மாநில அளவில் 8 மாணவா்களும், கல்லூரி அளவில் 52 மாணவா்களும் முதல் மூன்று இடங்களைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சோ்த்தனா்.

இம்மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த், மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

தொடா்ந்து, சிறப்பிடம் பெற்ற மாணவா்களை உருவாக்கிய துறைத் தலைவா்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி பதிவாளா் இளங்கோவன், கல்வி ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன், முதல்வா் நடேசன், துணை முதல்வா் ராஜேஷ் குமாா், துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.