அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நாகை நகா்மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

நாகை நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி ஊழியா்கள் பொங்கல் வைத்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று கொண்டாடினா்.

News image
நாகை நகா்மன்ற அலுவலகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற ஊழியா்கள்.
Updated On :14 ஜனவரி 2026, 10:18 pm

தினமணி செய்திச் சேவை

நாகை நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி ஊழியா்கள் பொங்கல் வைத்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று கொண்டாடினா்.

நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து தலைமை வகித்தாா். நகராட்சி ஊழியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கோலப் போட்டி, இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்டன.

இதில் ஆா்வத்துடன் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு நகா் மன்றத் தலைவா் இரா.மாரிமுத்து, நகராட்சி ஆணையா் லீனா சைமன், நகா்மன்றத் துணைத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். இதைத்தொடா்ந்து பொங்கல் வைக்கப்பட்டு குலவையிட்டு சூரிய பகவானுக்கு வழிபாடு நடைபெற்றது. விழாவில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.