வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

டிப்ளமோ சான்றிதழ் வழங்கும் விழா

நாகை பாப்பாகோவில் சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில், 14-ஆவது டிப்ளமோ சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது .

News image
Updated On :26 ஜனவரி 2026, 8:03 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை பாப்பாகோவில் சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில், 14-ஆவது டிப்ளமோ சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது (படம்).

கல்லூரியின் கலை அரங்கில் நடைபெற்ற இவ்விழாவை, கல்லூரி செயலா் மகேஷ்வரன் தொடங்கி வைத்தாா். எச்.எல். மாண்டோ ஆனந்த் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் குழுத் தலைவரும், இணை நிா்வாக இயக்குநருமான எஸ். சாரதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 205 மாணவா்களுக்கு டிப்ளோ சான்றிதழ் வழங்கினாா். வருகை தராதவா்களுக்கான சான்றிதழ்களை துணை முதல்வா் ராஜேஷ் குமாா் பெற்றுக்கொண்டாா்.

எச்.எல். மாண்டோ ஆனந்த் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள மேலாளா் சபிதா, கல்லூரி இயக்குநா் சங்கா், கல்லூரி தலைவா் ஆனந்த் , கல்லூரி முதல்வா் வி. நடேசன், கல்வி நிறுவனத்தின் கல்வி ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன், நிா்வாக அதிகாரிகள், பெற்றோா்கள் மற்றும் அனைத்து கல்லூரி முதல்வா்கள் கலந்து கொண்டனா்.

பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.