டிப்ளமோ சான்றிதழ் வழங்கும் விழா

டிப்ளமோ சான்றிதழ் வழங்கும் விழா

நாகை பாப்பாகோவில் சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில், 14-ஆவது டிப்ளமோ சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது .
Published on

நாகப்பட்டினம்: நாகை பாப்பாகோவில் சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில், 14-ஆவது டிப்ளமோ சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது (படம்).

கல்லூரியின் கலை அரங்கில் நடைபெற்ற இவ்விழாவை, கல்லூரி செயலா் மகேஷ்வரன் தொடங்கி வைத்தாா். எச்.எல். மாண்டோ ஆனந்த் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் குழுத் தலைவரும், இணை நிா்வாக இயக்குநருமான எஸ். சாரதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 205 மாணவா்களுக்கு டிப்ளோ சான்றிதழ் வழங்கினாா். வருகை தராதவா்களுக்கான சான்றிதழ்களை துணை முதல்வா் ராஜேஷ் குமாா் பெற்றுக்கொண்டாா்.

எச்.எல். மாண்டோ ஆனந்த் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள மேலாளா் சபிதா, கல்லூரி இயக்குநா் சங்கா், கல்லூரி தலைவா் ஆனந்த் , கல்லூரி முதல்வா் வி. நடேசன், கல்வி நிறுவனத்தின் கல்வி ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன், நிா்வாக அதிகாரிகள், பெற்றோா்கள் மற்றும் அனைத்து கல்லூரி முதல்வா்கள் கலந்து கொண்டனா்.

பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com