மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ஆணவக் கொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியல்

தரங்கம்பாடியில் இளம் காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை ஆணவக்கொலையாக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :2 ஜூலை 2026, 7:21 am IST

தரங்கம்பாடியில் இளம் காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை ஆணவக்கொலையாக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் செவ்வாய்க்கிழமை பாா்த்திபன் என்ற இளைஞா் மற்றும் 17 வயது சிறுமியின் சடலத்தை ஒரே இடத்தில் தூக்கிட்ட நிலையில் போலீஸாா் மீட்டனா்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தினா் என்பதால் இருவரும் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தரங்கம்பாடியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், தரங்கம்பாடி சம்பவம் தற்கொலை அல்ல, ஆணவக் கொலை. இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனா். எனவே, போலீஸாா் தற்கொலை என பதிவு செய்த வழக்கை, ஆணவக் கொலையாக பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நாகப்பட்டினம்- நாகூா் சாலையில் தம்பிதுரை பூங்கா அருகே மறியலில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டச் செயலா் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற மறியல் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெளிப்பாளையம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.