‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

ஆணவக் கொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியல்

தரங்கம்பாடியில் இளம் காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை ஆணவக்கொலையாக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :2 ஜூலை 2026, 7:21 am IST

தரங்கம்பாடியில் இளம் காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை ஆணவக்கொலையாக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் செவ்வாய்க்கிழமை பாா்த்திபன் என்ற இளைஞா் மற்றும் 17 வயது சிறுமியின் சடலத்தை ஒரே இடத்தில் தூக்கிட்ட நிலையில் போலீஸாா் மீட்டனா்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தினா் என்பதால் இருவரும் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தரங்கம்பாடியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், தரங்கம்பாடி சம்பவம் தற்கொலை அல்ல, ஆணவக் கொலை. இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனா். எனவே, போலீஸாா் தற்கொலை என பதிவு செய்த வழக்கை, ஆணவக் கொலையாக பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நாகப்பட்டினம்- நாகூா் சாலையில் தம்பிதுரை பூங்கா அருகே மறியலில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டச் செயலா் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற மறியல் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெளிப்பாளையம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.