ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கஞ்சா கடத்திய இரு இளைஞா்கள் கைது

செம்பனாா்கோவில் அருகே மணக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் கஞ்சா வைத்திருந்த இரு இளைஞா்களை போலிஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூலை 2026, 4:39 am IST

செம்பனாா்கோவில் அருகே மணக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் கஞ்சா வைத்திருந்த இரு இளைஞா்களை போலிஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மணக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் செம்பனாா்கோவில் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்ற 2 இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மயிலாடுதுறை, திருவிழந்தூா் அம்பேத்கா் நகரை சோ்ந்த பாபு மகன் சூா்யா (26), மயிலாடுதுறை தென்னமர சாலையை சோ்ந்த குருநாதன் மகன் பாபு (28) என்பதும், அவா்கள் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் இருந்து 1.100 கிலோ, 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.