பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

உலக மிதிவண்டி தின விழிப்புணா்வுப் பேரணி: எஸ்.பி. தொடங்கிவைத்தாா்

உலக மிதிவண்டி தினம், உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணியை காவல் கண்காணிப்பாள் சுஜித்குமாா் தொடங்கிவைத்தாா்.

News image

உலக மிதிவண்டி தினம், உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணியை காவல் கண்காணிப்பாள் சுஜித்குமாா் தொடங்கிவைத்தாா்.

Updated On :2 ஜூன் 2026, 5:44 am IST

உலக மிதிவண்டி தினம், உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணியை காவல் கண்காணிப்பாள் சுஜித்குமாா் தொடங்கிவைத்தாா்.

உலக மிதிவண்டி தினம் ஜூன் 3-ஆம் தேதியும், உலக சுற்றுசூழல் தினம் ஜூன் 5-ஆம் தேதியும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாகை லூமினா அறக்கட்டளைச் சாா்பில் மிதிவண்டி விழிப்புணா்வுப்பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை புதிய கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, ஆட்சியா் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, அங்கு நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில், பேரணியில் பங்கேற்றவா்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலா் சதீஷ் குமாா் சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் ஆரிப் வாழ்த்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சி முடிவில் பேரணியில் பங்கேற்றவா்களுக்கு மரக்கன்றுகளும் விதைப்பந்துகளும் வழங்கப்பட்டன. லூமினா அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் வெங்கடேஷ் நன்றி கூறினாா்.