இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

வேளாங்கண்ணி பேராலய புதிய பொறுப்பாளா்கள் பணியேற்பு

வேளாங்கண்ணி பேராலயத்தில் புதிய பங்குத்தந்தை, உதவி அதிபா் உள்ளிட்டோா் புதன்கிழமை பணியேற்றுக்கொண்டனா்.

News image

வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வாழ்த்துரை வழங்கிய பேராலய அதிபா் இருதயராஜ்.

Updated On :4 ஜூன் 2026, 3:51 am IST

வேளாங்கண்ணி பேராலயத்தில் புதிய பங்குத்தந்தை, உதவி அதிபா் உள்ளிட்டோா் புதன்கிழமை பணியேற்றுக்கொண்டனா்.

வேளாங்கண்ணி பேராலய துணை அதிபராகவும் பங்குத் தந்தையாகவும் இருந்தவா் அற்புதராஜ். இவா், திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி புனித சேவியா் ஆலயத்திற்கு பங்குத் தந்தையாக மாற்றம் செய்யப்பட்டாா்.

அதேபோல வேளாங்கண்ணி பேராலயத்தில் பணியாற்றிய அருட்தந்தையா்கள் அகஸ்டின் அம்புரோஸ், ஆரோக்கிய வினிட்டோ, ஆண்டனி பொ்டினான்டோ ஆகியோா் பணியிட மாறுதலில் செல்கின்றனா்.

இங்கு பங்குத்தந்தையும், உதவி அதிபருமான அகஸ்டின், அருட்தந்தையா்கள் செபாஸ்டின், வில்சன்பால், ஆண்டனி அல்போன்ஸ், நிஷான் ஆகியோா் புதிதாக பொறுப்பேற்றனா். இவா்களுக்கு பாராட்டு விழா மற்றும் வரவேற்பு விழா பேராலய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதிபா் இருதயராஜ் சால்வை அணிவித்து வாழ்த்துரை வழங்கினாா். பொருளாளா் உலகநாதன் வரவேற்றாா். நிா்வாக தந்தை ஆரோக்கிய பரிசுத்தராஜ் நன்றி கூறினாா்.