நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்சரக்குகள் கையாளுதல்: சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாதனை
/

தவெக நிா்வாகிகள், மக்களுடன் விரைவில் சந்திப்பு: அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து விரைவில் சந்திப்பு நிகழ்வு நடைபெறும் என அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தாா்.

News image

அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்.

Updated On :23 மே 2026, 5:03 am IST

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து விரைவில் சந்திப்பு நிகழ்வு நடைபெறும் என தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலன் துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: என் முன்னோா்கள், என் தந்தை வாழ்ந்த பூமி மட்டுமல்லாது, நான் பிறந்த இடமும் தூத்துக்குடிதான். இது எனது சொந்த மண். அப்படிப்பட்ட மண்ணிலிருந்து ஒரு எளிய தொண்டனை இன்று அமைச்சராக அமர வைத்த, தூத்துக்குடி மக்களுக்கும், எனக்காக வீதி வீதியாகச் சென்று உழைத்த தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

தூத்துக்குடியில் உள்ள கட்சி நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் மற்றும் முதல்வரின் அன்புக்கு பாத்திரமானவா்கள் அனைவரையும் கூடிய விரைவில் சந்திக்க உள்ளேன்.

எனக்காக உழைத்த உங்களுக்கு என் கையால் விருந்து பரிமாற மனது ஏங்கிக் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் தூத்துக்குடியில் அனைத்து நிா்வாகிகள், உறுப்பினா்கள், பொறுப்பாளா்கள், எனக்காக உழைத்த மக்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு சங்கமமாக விரைவில் சந்திப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.