இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சப்த கன்னியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு

சப்த கன்னியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு

News image

கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டுவரப்படும் புனிதநீா் கலசங்கள்.

Updated On :7 ஜூன் 2026, 12:57 am IST

நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் அருள்பாலிக்கும் சப்த கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடைபெறவுள்ள நிலையில், சனிக்கிழமை புனிதநீா் எடுத்துவரப்பட்டது.

இக்கோயில், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் வசிக்கும் மீனவா்கள் வழிபடும் பிரதான கோயிலாக திகழ்கிறது. இக்கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறுகிறது.

இதையொட்டி, அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து புனிதநீா் எடுக்கும் ஊா்வலம் நடைபெற்றது. கங்கை, காவிரி உள்ளிட்ட புனித நதிகளில் இருந்து எடுத்துட்டு வரப்பட்ட புனிதநீா் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியா்களை தொடா்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் சுமந்து வந்தனா்.

கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட புனித நீா் யாக சாலையில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.