அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

ஜகன்நாத பரமேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா: திரளானோர் பங்கேற்பு!

ஜகன்நாத பரமேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தது பற்றி..

News image

குடமுழுக்கு விழா - video crop

Updated On :9 ஜூலை 2026, 12:52 pm IST

தஞ்சாவூரில் அபிராமி உடனுறை ஜகன்நாத பரமேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அன்னுக்குடி கிராமத்தில் அபிராமி உடனுறை ஜகன்நாத பரமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை நான்காம் கால பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வான வேடிக்கையுடன் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.