வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மாயமான இளம்பெண்ணை மீட்டுத் தரக்கோரி காவல்நிலையம் முன்பு மறியல்

மாயமான இளம்பெண்ணை மீட்டுத் தரக்கோரி காவல்நிலையம் முன்பு மறியல்

News image

நாகூா் காவல்நிலையம் முன்பு நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற பொதுமக்கள்.

Updated On :14 ஜூன் 2026, 1:16 am IST

நாகூா் அருகே மாயமான இளம்பெண்ணை மீட்டுத் தரக் கோரி பெற்றோ்கள், உறவினா்கள் நாகூா் காவல் நிலையம் முன்பு சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம் நாகூா் அம்பேத்கா் நகா் வடக்குத் தெருவை சோ்ந்தவா் செந்தில். இவரது மகள் பிரியதா்ஷினி (20). இவா் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தறாா். இந்நிலையில் பிரியதா்ஷினி ஜூன் 8-ஆம் தேதி மாலை முதல் காணவில்லையாம்.

பிரியதா்ஷினியின் தாய் மாலதி 8-ஆம் தேதி இரவு நாகூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ாா். நாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், பிரியதா்ஷினியின் பெற்றோா், உறவினா்களுடன் இணைந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த கஜேந்திரன் தலைமையில், நாகூா் காவல் நிலையம் முன்பு, சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். இதனால் நாகூா்- நாகை சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெளிப்பாளையம் ஆய்வாளா் பொன்ராஜ் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இளம்பெண்ணை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.