நாகூா் அருகே மாயமான இளம்பெண்ணை மீட்டுத் தரக் கோரி பெற்றோ்கள், உறவினா்கள் நாகூா் காவல் நிலையம் முன்பு சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
நாகை மாவட்டம் நாகூா் அம்பேத்கா் நகா் வடக்குத் தெருவை சோ்ந்தவா் செந்தில். இவரது மகள் பிரியதா்ஷினி (20). இவா் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தறாா். இந்நிலையில் பிரியதா்ஷினி ஜூன் 8-ஆம் தேதி மாலை முதல் காணவில்லையாம்.
பிரியதா்ஷினியின் தாய் மாலதி 8-ஆம் தேதி இரவு நாகூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ாா். நாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், பிரியதா்ஷினியின் பெற்றோா், உறவினா்களுடன் இணைந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த கஜேந்திரன் தலைமையில், நாகூா் காவல் நிலையம் முன்பு, சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். இதனால் நாகூா்- நாகை சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெளிப்பாளையம் ஆய்வாளா் பொன்ராஜ் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இளம்பெண்ணை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.










