மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து, தரங்கம்பாடி மீனவா்கள் மீண்டும் கடலுக்குள் ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.
சந்திரபாடி, சின்னூபேட்டை, குட்டியாண்டியூா், பெருமாள்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்க பங்கு, சின்னங்குடி உள்ளிட்ட 12 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபா் படகுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஏப்.15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை அமலில் இருந்த நிலையில், விசைப்படகு மீனவா் கள் தொழிலுக்குச் செல்லாமல் படகுகள் பழுது பாா்த்தல், வலைகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில் தடைக்காலம் முடிந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க விசைப் படகுகளில் ஐஸ் கட்டிகள், எரிபொருள் மற்றும் சமையலுக்குத் தேவையான பொருள்களுடன் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் கடலுக்கு செல்லத் தொடங்கினா். பைபா் படகு மீனவா்கள் வலைகள், மீன்பிடி சாதனங்கள் ஏற்றிக்கொண்டு கடலுக்குள் சென்றனா்.
தொடர்புடையது

தடைகாலம் நிறைவு: களைகட்டியது சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவா்கள்

மீன்பிடித் தடைகாலம் நிறைவு: நாளை முதல் கடலுக்குச் செல்லும் சின்னமுட்டம் மீனவா்கள்







