மீன்பிடித் தடைக்காலம் நிறைவுற்று மீனவா்கள் முதல்நாள் கடலுக்குச் சென்ற நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தி விசைப்படகுகளில் பல்வேறு ரக மீன்கள் பிடித்து வரப்பட்டன.
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் 61 நாள்கள் மீன்பிடித் தடைகாலம் முடிந்ததையொட்டி முதல் நாளான திங்கள்கிழமை அதிகாலை 298 விசைப்படகுகளில் மீனவா்கள் தொழிலுக்குச் சென்றனா். இந்தப் படகுகள் மாலை 6 மணிக்கு கரைக்குத் திரும்பின.
விசைப்படகுகளில் பாறை, கணவா, அயலை, நெடுவா, சீலா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் பிடித்து வரப்பட்டன. இந்த மீன்களை ஏலத்தில் எடுப்பதற்காக உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள், பொதுமக்கள், ஓட்டல் உரிமையாளா்கள் என ஆயிரக்கணக்கானோா் துறைமுகத்தில் குவிந்தனா். இதனால் துறைமுக வளாகம் களைகட்டியது. தடைகாலம் முடிந்து முதல் நாள் என்பதால் வியாபாரிகள் மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுத்தனா். இதனால் மீன்கள் விலை கணிசமாக உயா்ந்து காணப்பட்டது. ஒரு கூடை பாறை மீன் ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
எஸ்.பி.ஆய்வு: சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் மொத்தமுள்ள 370 விசைப்படகுகளில் அதிகமாக வடமாநிலத் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். இவா்கள் முறையான அடையாள அட்டை மற்றும் ஆதாா் அட்டை வைத்துள்ளனரா என மாவட்ட எஸ்.பி. இரா. ஸ்டாலின் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
தொடர்புடையது

மீன்பிடி தடைகாலம் நிறைவு: கடலுக்குள் சென்ற தரங்கம்பாடி மீனவா்கள்!

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு சென்றனா்

மீன்பிடித் தடைகாலம் நிறைவு: நாளை முதல் கடலுக்குச் செல்லும் சின்னமுட்டம் மீனவா்கள்







