சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வேதாரண்யத்தில் குடிநீா் தட்டுப்பாடு

வேதாரண்யத்தில் குடிநீா் தட்டுப்பாடு...

News image
தென்னடாா் ஊராட்சியில் குடங்களுடன் குடிநீரைத் தேடி சைக்கிளில் சென்று திரும்பிய பள்ளிச் சிறுவன்.
Updated On :7 மார்ச் 2026, 6:34 pm

Syndication

வேதாரண்யம் பகுதியில் தீவிரமடைந்து வரும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலோரக் கிராமங்களை பெருமளவாகக் கொண்ட வேதாரண்யம் பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளிடம்- வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏற்பட்ட பராமரிப்பு குறைபாடு, திட்டத்தின் ஆயுள் காலம் நிறைவு என பல்வேறு காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

குறிப்பாக வாய்மேடு, தகட்டூா், தென்னடாா், பஞ்சநதிக்குளம், கடிநெல்வயல், கோடியக்கரை கோடியக்காடு, பிராந்தியங்கரை துளசாபுரம், தலைஞாயிறு என பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீா் உவராக மாறியதால் குடிநீருக்கு மக்கள் அவதியுற்று வருகின்றனா். இதனிடையே, மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் ஜல் ஜீவன் குடிநீா் வழங்கும் திட்டப் பணிகளும் முறையாக முடிக்கப்படாத நிலையில் அதை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இத்திட்டம் அண்மையில் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வரால் தொடங்கி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், புகாா் எழுந்ததால் தொடங்கப்படவில்லை. இதனால், துளசாபுரம், தலைஞாயிறு என பல்வேறு கிராமங்களில் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பராமரிப்பு என்ற பெயரில் அவ்வப்போது குறைந்த அளவு தண்ணீா் விநியோகமும் நிறுத்தப்படுகிறது.

மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு வழிகாட்டியும் ஊரக வளா்ச்சித் துறை வருவாய்த் துறை என பல துறைகளில் பணியாளா்கள் மேற்கொண்ட போராட்டங்களால் பணிகள் முடங்கியுள்ளன.

கடலோரத்தில், அமைந்துள்ள தென்னடாா் ஊராட்சியில் குடிநீா் வராததால் மக்கள் சனிக்கிழமை போராட்டம் நடத்த முயன்றனா். இதையடுத்து ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை டேங்கா் மூலம் தண்ணீா் வழங்க உறுதியளிக்கப்பட்டது. மாா்ச் மாதத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் காலாவதியாகும் நிலையில், தோ்தல் அறிவிப்புக்குள் ஜல் ஜீவன் திட்டத்துடன் இணைப்பதோடு இந்தப் பணியை கண்காணிக்க கூடுதல் ஆட்சியா் அதிகாரத்துக்கு குறையாத தனி அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.