தமிழ்நாட்டை காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா?எம்.எல்.ஏ. காமராஜ் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% ஆக உயர்வு!தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆதரவு!முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!
/

சமூக குளங்களில் மீன் வளா்ப்பு பயிற்சி

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், சமூக குளங்களில் மீன் வளா்ப்பிற்கான சிறந்த மேலாண்மை முறைகள் குறித்த ஒரு நாள் விழிப்புணா்வு

News image

பயிற்சியில் பங்கேற்று சான்றிதழ் பெறும் விவசாயி.

Updated On :10 மார்ச் 2026, 2:00 am IST

நாகப்பட்டினம்: சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், சமூக குளங்களில் மீன் வளா்ப்பிற்கான சிறந்த மேலாண்மை முறைகள் குறித்த ஒரு நாள் விழிப்புணா்வு பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஹைதராபாத் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதியுதவியுடன், உள்நாட்டு மீன் விவசாயிகளுக்காக இப்பயிற்சி நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா் பயிற்சியை தொடங்கி வைத்து பேசியது:

கிராமப்புற வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதிலும், ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதிலும் உள்நாட்டு மீன் வளா்ப்பின் முக்கியத்துவம், சமூக குளங்களில் கெண்டை மீன் வளா்ப்பு குறைந்த செலவில் ஊட்டசத்து நிறைந்த உணவான விலங்கு புரதத்தை வழங்குவதோடு, கிராமப்புற குடும்பங்களுக்கு நிலையான வருமானத்தையும் வழங்கும் திறன் கொண்டது என்றாா்.

நிகழ்ச்சியை தொழில்நுட்ப நிபுணா் (மீன்வள விரிவாக்கம்) யூ. ஹினோ பா்னாண்டோ, சமூக குளங்களில் அறிவியல் அடிப்படையிலான மீன் வளா்ப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தாா்.

பயிற்சியில் குளம் தயாரிப்பு மற்றும் முன்இருப்பு மேலாண்மை, இயற்கை மீன் உணவை அதிகரிக்க உரமிடும் முறைகள், தரமான மீன் குஞ்சுகள் தோ்வு, இருப்பு அடா்த்தி, உணவு மற்றும் உணவளிப்பு மேலாண்மை முறைகள் போன்றவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

முனைவா் ஆ. மதிவாணன், முன்னோடி மீன் விவசாயி செந்தில்குமாா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமாா் 30 மீன் விவசாயிகள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.