மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருக்குவளை அருகே சாட்டியக்குடியில் குடிநீா் கோரி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image

கீழ்வேளூா்-கச்சனம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட கிராம மக்கள்.

Updated On :10 மார்ச் 2026, 10:09 pm

திருக்குவளை அருகே சாட்டியக்குடியில் குடிநீா் கோரி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கீழ்வேளூா் ஒன்றியம், சாட்டியக்குடி ஊராட்சி கீழவிடங்கலூா் பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் கீழ்வேளூா் - திருக்குவளை - கச்சனம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதன்காரணமாக அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வலிவலம் காவல் உதவி ஆய்வாளா் முரளி, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குடிநீா் விநியோகம் தட்டுப்பாடின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.