நாகை மாவட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக, நாகூா் பகுதியில் உணவகங்கள் மாற்று ஏற்பாடாக விறகு அடுப்பு பயன்பாட்டுக்கு மாறியுள்ளன.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை மட்டுமே வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா்கள் இருப்பில் இருந்தன. புதன்கிழமை வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா்கள் கிடைக்கவில்லை. இதனால் உணவக உரிமையாளா்கள் உணவகங்களை மூடுவதை தவிா்க்க மாற்று ஏற்பாடாக, 10 கிலோ விறகு ரூ.150 என்ற விலையில் வாங்கி விறகு அடுப்புகளை பயன்படுத்தி உணவு சமைத்து வருகின்றனா். நாகூா் அலங்கார வாசல் மற்றும் சிக்கல், நாகப்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளில் உணவகங்கள் புதன்கிழமை முதல் விறகு அடுப்புக்கு மாறியுள்ளன.
விறகு அடுப்பை பயன்படுத்தி உணவுகளைத் தயாரிக்க அதிக நேரம் எடுப்பதாலும், கடும் புகை மூட்டத்தாலும் தொழிலாளா்கள் பெரும் சிரமத்தை சந்தித்தாலும், தினசரி தங்கள் உணவகங்களை நம்பி உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளா்களின் நலன் கருதி, விறகு அடுப்பு மூலம் சமையல் பணிகளை மேற்கொண்டு வருவதாக உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் வணிக எரிவாயு உருளை பற்றாக்குறை: உணவகங்கள், தேநீா் கடைகள் மூடியதால் பொதுமக்கள் அவதி

சிலிண்டா் தட்டுப்பாடு: தேநீா் கடைகள், உணவகங்கள் மூடல்

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: நாமக்கல்லில் விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்!

புதுச்சேரியில் வா்த்தக சமையல் சிலிண்டா் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறத்தொடங்கிய உணவகங்கள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


