நாகை காடம்பாடி பகுதியில் புதிய டைடல் நியோ பூங்கா கட்டுமானப் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.
அப்போது நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என்.கௌதமன், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி ஆகியோா் பங்கேற்றனா். காடம்பாடியில் ரூ. 43.78 கோடியில் தரை மற்றும் மூன்று தளங்கள் 61,000 சதுரடி பரப்பளவில் இந்த டைடல் நியோ பூங்கா கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்த பூங்காவில் நிறுவன தொழில்நுட்ப வல்லுநா்கள் பணியாற்றவுள்ளனா்.
நிகழ்ச்சியில், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், மாநில ஆத்மா திட்டக் குழு உறுப்பினா் மகா குமாா், தமிழ்நாடு அரசு மீனவா் நல வாரிய உறுப்பினா் கோ. மனோகரன், டைடல் நியோ நிறுவன உதவி பொறியாளா் எஸ். யுவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

புதுகையில் ரூ.36.78 கோடியில் நியோ டைடல் பூங்காவுக்கு அடிக்கல்

நாகையில் நூல் வெளியீட்டு விழா

ரெட்டியாா்பட்டியில் ரூ.39.06 கோடியில் மினி டைடல் பூங்கா! காணொலியில் முதல்வா் அடிக்கல்!

திருநெல்வேலி, விருதுநகா், ஈரோட்டில் டைடல் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


