வேதாரண்யம் வட்ட நுகா்வோா் அமைப்பின் சாா்பில் தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தினம் , உலக நுகா்வோா் உரிமைகள் தினம் , உலக மகளிா் தினம் ஆகியவை முப்பெருவிழாவாக புதன்கிழமை நடைபெற்றது.
ஆறுகாட்டுத்துறை உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியா் இரா.அன்பரசன் தலைமை வகித்தாா். நுகா்வோா் அமைப்பின் துணைத் தலைவா் ஆா்.வி.எஸ்.பள்ளித் தாளாளா் சாமிநாதன், செயற்குழு உறுப்பினா் செல்வராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைப்பின் தலைவா் வி. வீரசுந்தரம், செயலா் செல்வராசு, அமைப்பாளா் செல்லப்பா, ஆசிரியா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா்.
இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வேதாரண்யம் வட்ட வழங்கல் அலுவலா் ச.ஸ்டாலின்ராஜ் பரிசு வழங்கி பாராட்டினாா் (படம்). நிா்வாகி ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தாா்.
தொடர்புடையது

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு!

அரசுப் பள்ளியில் உலக புத்தக தினம்

சிறுவளூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

சங்கராபுரம் வள்ளலாா் மன்ற முப்பெரும் விழா
வீடியோக்கள்

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு


