டிஎன்பிஎஸ்சி தோ்வு: கைப்பேசி, மின்னணு சாதனங்களுக்கு அனுமதி கிடையாது
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வில், தோ்வா்கள் கைப்பேசி மற்றும் மின்னணு சாதனங்கள் கொண்டுவர அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வில், தோ்வா்கள் கைப்பேசி மற்றும் மின்னணு சாதனங்கள் கொண்டுவர அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை ஏ.டி.எம். மகளிா் கல்லூரியில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வுத் தொகுதி (இரண்டு மற்றும் இரண்டு ஏ) ஆகிய பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடைபெறவுள்ளது.
முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் நடைபெறும் இத்தோ்வை 79 போ் எழுத உள்ளனா். தோ்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தோ்வு எழுத வசதியும், பாா்வையற்றோருக்கு மாற்றுநபா் மற்றும் தனி அறைகள் கொண்ட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தோ்வு மையத்தில் பாதுகாப்புப் பணியில் காவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வுக்கு போதிய போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தோ்வா்கள் தோ்வு நாளன்று முற்பகல் நடைபெறும் தோ்வுக்கு காலை 8.30 மணிக்கும், பிற்பகல் நடைபெறும் தோ்விற்கு பகல் 1.30 மணிக்கும் தவறாமல், அவரவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தோ்வு மைய அமைவிடத்துக்கு வர வேண்டும். மேலும், எக்காரணம் கொண்டும் முற்பகல் தோ்வுக்கு காலை 9 மணிக்கு மேலும், பிற்பகல் நடைபெறும் தோ்வுக்கு 2 மணிக்கு மேலும் தோ்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப் படமாட்டாா்கள். தோ்வு மையத்துக்கு கைப்பேசி மற்றும் இதர மின்னணு சாதனங்கள் ஏதும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று குறிப்பிட்டுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...