கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

Syndication

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சொகுசு காரில் எடுத்துவரப்பட்ட 2 உலோகச் சிலைகளை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தரங்கம்பாடி வட்டம், சங்கரன்பந்தல் கிராமத்தில், செம்பனாா்கோவில் வட்டாரக் கல்வி அலுவலா் புனிதவதி தலைமையிலான பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசுக் காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில், தலா ஓா் அடி உயரத்தில் நடராஜா், சிவகாமசுந்தரி சிலைகள் இருந்தன.

இதுகுறித்து காரில் வந்த திண்டுக்கல் மாவட்டம் செந்தூரைப் பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் (54) என்பவரிடம் விசாரித்தனா். அவா், அந்த சிலைகளை குடும்பத்தினா் வழிபட்டு வருவதாகவும், சிதம்பரம் நடராஜா் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு சொந்த ஊருக்குச் செல்வதாகவும் தெரிவித்துள்ளாா். ஆனால், சிலைகளுக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதையடுத்து, அந்த சிலைகளை பறிமுதல் செய்து, தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.