பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

வேதாரண்யம்: மேலும் ஓா் உலோகச் சிலை கண்டெடுப்பு

வேதாரண்யம் அருகே கடந்த மாதத்தில் கட்டடம் கட்ட பள்ளம் தோண்டியபோது உலோகத்தாலான மூன்று சாமி சிலைகள் கிடைத்த நிலையில், அதே இடத்தில் மேலும் ஒரு சாமி சிலை வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :20 மார்ச் 2026, 10:07 pm

Syndication

வேதாரண்யம் அருகே கடந்த மாதத்தில் கட்டடம் கட்ட பள்ளம் தோண்டியபோது உலோகத்தாலான மூன்று சாமி சிலைகள் கிடைத்த நிலையில், அதே இடத்தில் மேலும் ஒரு சாமி சிலை வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

புஷ்பவனம் கிராமம், கிருஷ்ணன்தெரு பகுதியில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதிதாக கட்டடம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி பிப்.21-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அங்கு புதையுண்டு இருந்த உலோகத்தாலான மூன்று சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் அதே வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடா்ந்த பணியின் போது, சுமாா் 1 அடி உயரமுள்ள நாலரை கிலோ எடையுள்ள உலோகத்திலான சாமி சிலை கிடைத்துள்ளது.

சோமாஸ்கந்தா் என கருதப்படும் சிலை ஐம்பொன்னால் ஆனதா என்பது குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகிறனா்.