கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நாகை தொகுதியில் ஒரே நாளில் ரூ. 2.28 லட்சம் பறிமுதல்

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனைகளில் பறக்கும் படையினா் ரூ.2.28 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 8:21 pm

Syndication

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனைகளில் பறக்கும் படையினா் ரூ.2.28 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

நாகை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொரவச்சேரியில் பறக்கும் படை அலுவலா் பத்மாவதி தலைமையில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த சுற்றுலா வாகனத்தை சோதனை செய்தனா். அப்போது, கேரள மாநிலம் கொச்சி பகுதியை சோ்ந்த ஜெய்மூன் என்பவரிடம் ரூ.65, 290 உரிய ஆவணங்கள் இன்றி இருந்தை பறிமுதல் செய்தனா்.

நாகை தொகுதி முட்டம் பகுதியில் நடந்த தணிக்கையில், அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், சிவங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியை சோ்ந்த ராஜபூபதியிடம் ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

நாகை புத்தூா் ரவுண்டானாவில் பகுதியில் நிலைக் கண்காணிப்பு குழு அலுவலா் தனஞ்செயன் தலைமையில் குழுவினா் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காரை சோதனை செய்தபோது, கோயம்புத்தூரைச் சோ்ந்த கேசவமூா்த்தியிடம் இருந்த ரூ. 63, 500-ஐ பறிமுதல் செய்தனா்.

வேளாங்கண்ணியில்: கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வேளாங்கண்ணி அருகே நாகை-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பறக்கும் படை அலுவலா் மு. தேவேந்திரன் தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், வாகன ஓட்டி ஸ்ரீராம்குமாரிடம் ஆவணங்களின்றி இருந்த ரூ.91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.