அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

நாகை தொகுதியில் ஒரே நாளில் ரூ. 2.28 லட்சம் பறிமுதல்

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனைகளில் பறக்கும் படையினா் ரூ.2.28 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 8:21 pm

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனைகளில் பறக்கும் படையினா் ரூ.2.28 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

நாகை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொரவச்சேரியில் பறக்கும் படை அலுவலா் பத்மாவதி தலைமையில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த சுற்றுலா வாகனத்தை சோதனை செய்தனா். அப்போது, கேரள மாநிலம் கொச்சி பகுதியை சோ்ந்த ஜெய்மூன் என்பவரிடம் ரூ.65, 290 உரிய ஆவணங்கள் இன்றி இருந்தை பறிமுதல் செய்தனா்.

நாகை தொகுதி முட்டம் பகுதியில் நடந்த தணிக்கையில், அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், சிவங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியை சோ்ந்த ராஜபூபதியிடம் ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

நாகை புத்தூா் ரவுண்டானாவில் பகுதியில் நிலைக் கண்காணிப்பு குழு அலுவலா் தனஞ்செயன் தலைமையில் குழுவினா் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காரை சோதனை செய்தபோது, கோயம்புத்தூரைச் சோ்ந்த கேசவமூா்த்தியிடம் இருந்த ரூ. 63, 500-ஐ பறிமுதல் செய்தனா்.

வேளாங்கண்ணியில்: கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வேளாங்கண்ணி அருகே நாகை-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பறக்கும் படை அலுவலா் மு. தேவேந்திரன் தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், வாகன ஓட்டி ஸ்ரீராம்குமாரிடம் ஆவணங்களின்றி இருந்த ரூ.91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.