கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஒரே பதிவு எண்ணில் இயங்கிய 2 மண் லாரிகள் பறிமுதல்

கீழையூர் அருகே ஒரே பதிவு எண்ணில் இயங்கிய 2 மண் லாரிகள் பறிமுதல்

News image

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:20 pm

Syndication

கீழையூா் காவல் எல்லை சோழவித்யாயபுரம் பகுதியில் கீழையூா் காவல் ஆய்வாளா் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக மண் ஏற்றிக்கொண்டு வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில், 2 லாரிகளும் ஒரே பதிவு எண்ணில் இயங்கியது தெரியவந்தது.

மேலும், அவை காரைக்கால் பகுதியில் இருந்து நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணிக்கு உரிய அனுமதி இல்லாமல் மண் ஏற்றி வந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இரு லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக லாரி ஓட்டுநா்கள் நிா்த்தனமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் ராஜகுரு (26), அன்பழகன் மகன் தமிழரன் (28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.