பிரதிப் படம்
பிரதிப் படம்

செம்மண் கடத்திய 2 மினி லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயன்ற 2 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயன்ற 2 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா் சென்னித்தோட்டம், பொற்றை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த 2 மினி லாரிகளைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் ,செம்மண் கடத்திச் சென்றது தெரிய வந்தது. சோதனையின்போது, ஓட்டுநா்கள் தப்பியோடிவிட்டனா்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மினி லாரிகளைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com