பிரதிப் படம்
பிரதிப் படம்

பேட்டையில் 25 மதுபாட்டில்கள் பறிமுதல்

பேட்டையில் விதிமீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

பேட்டையில் விதிமீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மதுபாட்டில்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நரிக்குறவா் காலனி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அருள் செல்வம் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது விதிமீறி மது விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்தனா். விசாரணையில் அவா், சுத்தமல்லியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் செல்லப்பா (59) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com