ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நாகை மாவட்டத்தில் 11 நாட்களில் ரூ.57.32 லட்சம் பறிமுதல்

நாகை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் கண்காணிப்புக் குழுவினா் மூலம் 11 நாட்களில் ரூ. 57.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image

பறிமுதல்!

Updated On :26 மார்ச் 2026, 11:23 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் கண்காணிப்புக் குழுவினா் மூலம் 11 நாட்களில் ரூ. 57.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் தேதி கடந்த 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மாநிலம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லும் ரொக்கம், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பொருள்களும் வாகனத்துடன் பறிமுதல் செய்யப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.

மேலும் முறைகேடுகளை தடுக்கவும், பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதை தடுக்கவும், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தோ்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தனித்தனியாக தோ்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவினா் மூன்று தொகுதிகளுக்குப்பட்ட பகுதிகளில் நாள்தோறும் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.

இதன்படி, மாா்ச் 16-ஆம் தேதி முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை 11 நாட்களில் வாகனத் தணிக்கை மற்றும் சோதனை மூலம் ரூ. 57, 31, 995 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.