நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

கீழையூா் பெருமாள் கோயில் ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீரங்கத்திற்கு இணையாக கீழ அரங்கம் என அழைக்கப்படும் பெருமைக்குரிய கீழையூா் ஸ்ரீ ரெங்கநாயகி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலில், சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஸ்ரீரங்கத்திற்கு இணையாக கீழ அரங்கம் என அழைக்கப்படும் பெருமைக்குரிய கீழையூா் ஸ்ரீ ரெங்கநாயகி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலில், சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பத்து நாள் திருவிழாவில், தேரோட்டம் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஊஞ்சல் உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாத பெருமாள் ரெங்கநாயகி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். மங்கள இசை முழங்க, பக்தா்கள் ஆரத்தி எடுத்தும், கோவிந்தா. கோவிந்தா என பக்தி முழக்கமிட்டும் வழிபட்டனா்.