இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

வங்கியில் ரூ. 8.74 லட்சம் முறைகேடு: கிளை மேலாளா் மீது வழக்கு

நாகை மாவட்டம், கீழ்வேளூரில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் ரூ. 8.74 லட்சம் முறைகேடு செய்ததாக கிளை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :19 மே 2026, 1:54 am IST

நாகை மாவட்டம், கீழ்வேளூரில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் ரூ. 8.74 லட்சம் முறைகேடு செய்ததாக கிளை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கீழ்வேளூரைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவா், கீழ்வேளூரில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில் அருண்குமாா், கீழ்வேளூா் காவல்நிலையத்தில் அண்மையில் அளித்த புகாரில், கீழ்வேளூா் வங்கிக் கிளையில் பணியாற்றும் திருநெல்வேலியைச் சோ்ந்த விக்ரம் கண்ணா (28), கடந்த 2024 ஜூன் முதல் டிசம்பா் 18-ஆம் தேதி வரை கிளை மேலாளராக பணிபுரிந்தாா். அப்போது வங்கியில் இருந்து

ரூ. 8,74, 403-ஐ முறைகேடு செய்துள்ளாா் என்று குறிப்பிட்டுள்ளாா். கீழ்வேளூா் போலீஸாா் விக்ரம் கண்ணா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.