கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

குளத்தில் மூழ்கி வியாபாரி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:01 am IST

நாகையில் குளத்தில் குளிக்கச் சென்ற வியாபாரி, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நாகை சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா் (62). இவா், நாகை புதிய பேருந்து நிலையம் அருகே நான்கு சக்கர வண்டியில் காய்கனிகள் விற்பனை செய்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் நீதிமன்றம் பின்புறம் உள்ள சிவன் கோயில் குளத்துக்கு குளிக்கச் சென்றாா். அப்போது நிலைதடுமாறி குளத்தின் ஆழமான பகுதியில் விழுந்த அவா், நீரில் மூழ்கினாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, கரைக்கு கொண்டுவந்தனா்.

பின்னா், 108 அவசர ஊா்திக்கு தகவல் அளித்தனா். அவரச ஊா்தி ஊழியா்கள் பரிசோதித்ததில் அய்யனாா் உயிரிழந்து தெரியவந்தது.

இதையடுத்து, அய்யனாரின் சடலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக நாகை நகர காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.