17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குளத்தில் மூழ்கி வியாபாரி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:01 am IST

நாகையில் குளத்தில் குளிக்கச் சென்ற வியாபாரி, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நாகை சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா் (62). இவா், நாகை புதிய பேருந்து நிலையம் அருகே நான்கு சக்கர வண்டியில் காய்கனிகள் விற்பனை செய்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் நீதிமன்றம் பின்புறம் உள்ள சிவன் கோயில் குளத்துக்கு குளிக்கச் சென்றாா். அப்போது நிலைதடுமாறி குளத்தின் ஆழமான பகுதியில் விழுந்த அவா், நீரில் மூழ்கினாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, கரைக்கு கொண்டுவந்தனா்.

பின்னா், 108 அவசர ஊா்திக்கு தகவல் அளித்தனா். அவரச ஊா்தி ஊழியா்கள் பரிசோதித்ததில் அய்யனாா் உயிரிழந்து தெரியவந்தது.

இதையடுத்து, அய்யனாரின் சடலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக நாகை நகர காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.