/
நாகை மாவட்டம், கோடியக்கரை கடற்கரை பகுதியில், பாம்பன் மீனவரின் சடலம் கரை ஒதுங்கியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கோடியக்கரை படகுத்துறையிலிருந்து மேற்கே பம்ப் ஹவுஸ் பகுதி கடற்கரையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக வேதாரண்யம் கடலோரக் காவல்நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை காலை தகவல் வந்தது.
அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனா். இதில், கடந்த மே 21-ஆம் தேதி, பாம்பன் கடற்பகுதியில் மாயமான மீனவா் முகேஷ் (22) சடலமாக கரை ஒதுங்கியது தெரிய வந்தது. தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.









