இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திருக்கரவாசல் தியாகராஜ சுவாமி கோவிலில் மே 15-ல் கொடியேற்றம்

திருவாரூர் மாவட்டம், திருக்கரவாசலில் அருள்மிகு ஆதிவிடங்கத் தியாகராஜ சுவாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி மே 15-ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.

Updated On :12 மே 2013, 6:33 am IST

திருவாரூர் மாவட்டம், திருக்கரவாசலில் அருள்மிகு ஆதிவிடங்கத் தியாகராஜ சுவாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி மே 15-ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோவிலில் நிகழாண்டு வைகாசி விசாக பெருவிழா மே 14-ம் தேதி காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. மே 15-ம் தேதி காலை 6 மணிக்கு ரிஷப லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறு கிறது. மாலை 6 மணிக்கு யாகசாலை தொடங்குகிறது. அடுத்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது. மே 16 மாலை 5.30 மணிக்கு ஸ்ரீசந்திரசேகரர் பட்டம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா, கைலாச நாயகிக்கு புஷ்ப அலங்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மே 17-ம் தேதி தியாகராஜ சுவாமிக்கு மகாபிஷேகம், சுவாமி குக்குட நடனத்துடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்தடுத்த நாள்களில் சுவாமி வீதியுலா உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மே 21-ம் தேதி சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தல், மே 23-ம் தேதி திருத்தேர் வீதியுலா நடைபெறுகிறது. மே 24-ல் விசாகத் தீர்த்தவா ரியுடன் விழா நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர்கள் ஆர். ஜெயக்குமார் (திருவாரூர்), டி. சிவக்குமார் (திருக்கரவாசல்) மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.