
வேலைவாய்ப்பு முகாம்: வேலுடையார்பாலிடெக்னிக் மாணவர்கள் 36 பேர் தேர்வு
வெளிவளாக வேலைவாய்ப்பு முகாமில் வேலுடையார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 36 பேர் தேர்வாகியுள்ளனர்.
வெளிவளாக வேலைவாய்ப்பு முகாமில் வேலுடையார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 36 பேர் தேர்வாகியுள்ளனர்.
திருவாரூர் அருகே அம்மையப்பனில் செயல்பட்டு வரும் வேலுடையார் பாலிடெக்னிக் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் வெளி வளாக வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றனர்.
இதில் லூக்காஸ் டிவிஎஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்ற இயந்திரவியல் துறையிலிருந்து 20 மாணவர்கள், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையிலிருந்து 9 மாணவர்கள், யுரேகா போர்ப்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையிலிருந்து 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகிய மாணவர்களுக்கு வேலுடையார் கல்விக் குழுமத் தலைவர் கே.எஸ்.எஸ். தியாகபாரி, கல்விக் குழுமச் செயலர் எஸ். செந்தூர்பாரி, கல்விக்குழும உறுப்பினர் கே.ஜி. சீலன், கல்லூரி முதல்வர் ஜி. மணிகண்டன் உள்ளிட்டோர் பாராட்டுத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





