அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பைங்காநாடு கிராமத்தில் மின் பராமரிப்புப் பணி

மன்னார்குடியை அடுத்த திருமக்கோட்டை துணைமின் நிலையம் சார்பில், பைங்காநாடு கிராமத்தில் மின் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:14 pm

DIN

மன்னார்குடியை அடுத்த திருமக்கோட்டை துணைமின் நிலையம் சார்பில், பைங்காநாடு கிராமத்தில் மின் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் மின் விபத்துக்களை தவிர்க்கவும், தடையின்றி மின் விநியோகம் செய்யவும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி மின்துறை சார்பில் மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருமக்கோட்டையை அடுத்த பைங்காநாடு கிராமத்தில், மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை வெட்டுதல், பழுதான மின் கம்பங்கள், மின் கம்பிகளை மாற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் வியாழக்கிழமை பொய்த மழையினூடே ஈடுபட்டனர். இப்பணிகளை மன்னார்குடி மின்வாரிய செயற்பொறியாளர் கி. ராதிகா ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார்.
இதுபோன்ற பராமரிப்பு பணிகள் அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெறும் என உதவி செயற்பொறியாளர் சா. சம்பத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.