தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

"உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள்'

உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள் என திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:36 am IST

உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள் என திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
திருவாரூரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
ஆசிரியர் பணி என்பது உயர்வானது. ஆசிரியர்கள் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள். களிமண்ணை மெல்ல உருமாற்றி, அதற்கு உருவம் கொடுத்து சிறப்பாக மாற்றும் பணியை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். பள்ளிகளிலிருந்து மாணவர்கள் தன்னம்பிக்கையோடு வெளியேற காரணம் ஆசிரியர்களே. பணிக்காலத்தில் சிறப்பாகப் பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களின் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்றார்.
முதன்மைக் கல்வி அலுவலர் கோ. தனமணி பேசியது: மாணவர்களை நல்ல முறையில் வழி நடத்திச் செல்ல வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், இனி வரும் காலங்களை பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன்கள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அம்மையப்பன், பொதக்குடி, பனங்குடி, திருநெய்ப்பேர், மன்னார்குடி, கொடிக்கால்பாளையம், எடமேலையூர், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், எடையூர், பெருகவாழ்ந்தான், ஆலங்குடி, இடும்பாவனம், கருவாக்குறிச்சி ஆகிய 14 இடங்களில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாவட்டத்  தலைவர் டி.எஸ்.ஆர். கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆர். விஜயா, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் அ. சீனிவாசன், மாவட்ட உதவித் திட்ட அலுவலர் (அனைவருக்கும் கல்வி) ஆர். சங்கரநாராயணன், மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் (அனைவருக்கும் இடைநிலைக்கல்வி) கே. கலைவாணன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெ. திருமாறன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாவட்டச் செயலர் எம்.எஸ். பாலு மற்றும் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.